fbpx

இரவு முழுவதும் காதலனுடன் உல்லாசம்..!! ஆத்திரத்தில் ஆணவக்கொலை..!! உடலை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற தந்தை..!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் முச்சல் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார் கூலித்தொழிலாளி. இவரது 16 வயது மகள் இரவு வீடு திரும்பாத நிலையில், மறுநாள் காலையில் தனது காதலனுடன் வீட்டுக்கு வந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை, அந்த இளைஞருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆத்திரம் தீராத நிலையில், அந்த இளைஞரை அங்கிருந்து அடித்து துரத்திவிட்டு தனது மகளை இரும்பு கம்பியாலும், கையாளும் அடித்துக் கொடூரமாக கொலை செய்தார். பின்னர், தனது இருசக்கர வாகனத்தின் பின்புறம், கொலை செய்யப்பட்ட தனது மகளின் உடலை கட்டி, சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றார்.

இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், தனது மகளின் உடலை ரயில்வே தண்டவாளத்தில் வீசிவிட்டு அந்த கொடூர தந்தை வீட்டிற்கு திரும்பினார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்தனர். பெற்றோரை மீறி காதலித்ததால், தனது 16 வயது மகளை தந்தையே ஆணவக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

ரஜினியின் மகள் 6 மாத கர்ப்பம்..!! பிரம்மாண்ட வளைகாப்புக்கு ’நோ’ சொன்ன ரஜினி..!! பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

Fri Aug 11 , 2023
சினிமா விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா பற்றி ஒரு அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”ரஜினியின் மகள் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதால் விரைவில் அவர்களது வீட்டில் வளைகாப்பு நடக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவரும் விரைவில் சேர்ந்து வாழ உள்ளதாக அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார். ரஜினியின் மகள் […]

You May Like