fbpx

திருப்பூர் அருகே பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி…..! வெளியான பகீர் கண்காணிப்பு கேமரா காட்சிகள்…..!

திருப்பூர் காமாட்சியம்மன் கோவில் வீதியில் இருக்கின்ற வணிக வளாகத்தில் அனுமத்சிங் என்பவர் குக்கர், மிக்ஸி போன்ற வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், இவருடைய கடைக்கு துப்பாக்கி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த மர்ம நபர்கள், உரிமையாளரை மிரட்டி 15 லட்சம் ரூபாய் பணம் மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது குறித்து விசாரணை இறங்கிய காவல்துறையினர் பல்லடம் சாலையில் கொள்ளையர்கள் விட்டு சென்ற காரை கைப்பற்றி இருக்கின்றனர்.தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் கை ரேகைகளை சேகரித்த அவர்கள் கார் உரிமையாளர் சக்திவேல் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், கொள்ளையர்கள் பணத்துடன் தப்பிச்சென்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.

மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கின்ற காமாட்சியம்மன் கோவில் வீதியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

சென்னை ஆவடி அருகே மகளின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தாய்…..! தற்கொலைக்கான காரணம் என்ன காவல்துறையினர் தீவிர விசாரணை…..!

Sun Jul 30 , 2023
ஆவடி அருகே அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோதிபாஸ். இவர் மருத்துவப் பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார் இவருடைய மனைவி ரம்யா (37) இந்த தம்பதிகளுக்கு 13 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். ஜோதிபாசுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் இந்த நிலையில், ரம்யாவின் மகளுக்கு நேற்று பிறந்த நாள் என்று கூறப்படுகிறது. அதனால் கேக் வெட்டி அந்த விழாவை […]

You May Like