fbpx

பரபரப்பு..! ரயில் தண்டவாளத்தில் பாறை கற்கள்…! குற்றவாளியை கைது செய்த காவல்துறை…!

கர்நாடகா மாநிலம், மைசூரில் இருந்து பெங்களூர் மற்றும் திருப்பத்தூர், வாணியம்பாடி ஆம்பூர் வழியாக சென்னை வரை செல்லக்கூடிய காவிரி விரைவு ரயில் இந்த வழித்தடத்தில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆம்பூர் அருகே நேற்று காவிரி விரைவு ரயில் வேகமாக வந்துகொண்டிருந்தது. தண்டவாளத்தில் வைக்கப்பட்ட பாறைகள் மீது விரைவு ரயில் மோதியது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஆம்பூர்- பச்சக்குப்பம் ரயில் நிலையம் இடையே தண்டவாளத்தில் கான்கிரீட் கல் வைத்தது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மங்கள் பிரசாத் என்ற மன நலம் பாதிக்கப்பட்ட நபர் என்பது தெரிய வந்துள்ளது. மங்கள் பிரசாத்துக்கு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து உறவினர்களிடம் ஒப்படைக்க ரயில்வே போலீசார் முடிவு செய்துள்ளனர்.

நேற்று காலை காவேரி விரைவு ரயில் எஞ்சின் கான்கிரீட் கல் மீது மோதியதை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

செக்...! இனி அரசு அலுவலகத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு...! உடனே செயல்படுத்த மத்திய அரசு உத்தரவு...!

Mon Jun 26 , 2023
மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் அடிப்படையிலான வருகைப்பதிவை உடனடியாக செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு அதன் அனைத்து துறைகளையும் தங்களின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் ஆதாருடன் இயக்கப்பட்ட பயோமெட்ரிக் முறை மூலம் தங்கள் வருகையை கட்டாயமாக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கணினியில் பதிவு செய்தும் வருகையைக் குறிக்காத அரசுத் துறைகள் மற்றும் ஊழியர்களின் அலட்சியத்தைக் கண்டறிந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆதார் செயல்படுத்தப்பட்ட […]
சூப்பரோ சூப்பர்..!! ஒரே நேரத்தில் 1,70,461 ஆசிரியர்களுக்கு பணி..!! மாநில அரசு அதிரடி அறிவிப்பு..!!

You May Like