fbpx

மீண்டும் திரும்பிய ரோகித்..!! தொடரை கைப்பற்றுமா இந்தியா..? இன்று 2-வது ஒருநாள் போட்டி..!!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இதனால் ஒருநாள் தொடரையும் வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா உள்ளது. மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. ஃபார்மில் இல்லை என விமர்சிக்கப்பட்ட கே.எல்.ராகுலும் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி அசத்தினார். டாப் ஆர்டரும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறும்.

முதல் போட்டியில் பங்கேற்காத இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இதனால், ஷுப்மன் கில் அல்லது இஷான் கிஷனில் ஒருவர் தான் இந்த போட்டியில் பங்கேற்க முடியும் என்ற நிலை உள்ளது. இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் நோக்கில் இந்திய அணி உள்ளது. அதேபோல், முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியின் உள்ளது. இதனால், இன்றைய போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டு பேருந்து நிலையம் அருகே வீசப்பட்ட பெண்ணின் உடல்…..! டெல்லியில் பரபரப்பு….!

Sun Mar 19 , 2023
டெல்லி சராய் காலே கான் பகுதியில் இருக்கின்ற பேருந்து நிலையம் அருகே இன்று அதிகாலை துண்டாக்கப்பட்ட மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், அடையாளம் காண்பதற்கு ஒரு தடயவியல் குழு நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பெண்ணின் சடலமாக இருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது. அதோடு, பாதிக்கப்பட்டவர் கொலை செய்யப்பட்டு அதன் பிறகு பல துண்டுகளாக வெட்டப்பட்டு, பிளாஸ்டிக் பைக்குள் போட்டு அப்புறப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்திருக்கிறது. உடல் உறுப்புகள் […]

You May Like