மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் முக.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தில் சிலருக்கு அரசே முன்வந்து ஏடிஎம் கார்டுகளை வழங்குகிறது. அதற்கான கார்டுகள் ரேஷன் கடைகளுக்கு வங்கிகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் பயனாளர்கள் ரேஷன் கடைகளில் அந்த ஏடிஎம் கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
இந்நிலையில், நாளை “உரிமைத் தொகைக்கு நன்றி”. “உரிமைத் தொகை 1000” போன்ற வாசகங்களை எழுதி அனைவரின் வீட்டிலும் கோலமிட வேண்டும் என திமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் சுவரொட்டி மூலம் விளம்பரம் செய்யவும், பேருந்து நிலையம், அங்காடிகள் உள்ளிட்ட இடங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடவும், உள்ளூரில் ஆட்டோ ஏற்பாடு செய்து 2 நாட்களுக்கு இத்திட்டத்தை பிரச்சாரம் செய்யவும் தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.