fbpx

ரூ.1,000 உரிமைத்தொகை..!! அனைவரது வீட்டிலும் இதை செய்யுங்க..!! தலைமை போட்ட உத்தரவு..!!

மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் முக.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தில் சிலருக்கு அரசே முன்வந்து ஏடிஎம் கார்டுகளை வழங்குகிறது. அதற்கான கார்டுகள் ரேஷன் கடைகளுக்கு வங்கிகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் பயனாளர்கள் ரேஷன் கடைகளில் அந்த ஏடிஎம் கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

இந்நிலையில், நாளை “உரிமைத் தொகைக்கு நன்றி”. “உரிமைத் தொகை 1000” போன்ற வாசகங்களை எழுதி அனைவரின் வீட்டிலும் கோலமிட வேண்டும் என திமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் சுவரொட்டி மூலம் விளம்பரம் செய்யவும், பேருந்து நிலையம், அங்காடிகள் உள்ளிட்ட இடங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடவும், உள்ளூரில் ஆட்டோ ஏற்பாடு செய்து 2 நாட்களுக்கு இத்திட்டத்தை பிரச்சாரம் செய்யவும் தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

Chella

Next Post

பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டல்....! ஓவிய ஆசிரியருக்கு கிடைத்த வெகுமதி....!

Thu Sep 14 , 2023
பொதுவாக பெண் பிள்ளைகளை பெற்றவர்கள், தங்களுடைய குழந்தைகளை மற்றவர்களை நம்பி, வீட்டை விட்டு வெளியே அனுப்ப தயங்குவார்கள். ஆனால், அவர்கள் பெண் பிள்ளைகளை தைரியத்துடன், நம்பி அனுப்பும் ஒரே இடம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்றவை தான். ஆனால், அங்கே பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் துயரத்தை சொல்வதற்கான வார்த்தைகள் தென்படவில்லை. இப்படி பல பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளிலும் பாலியல் சீண்டல்கள் நடந்து வருகிறது. […]

You May Like