fbpx

ரூ.13.8 கோடி கடன் தள்ளுபடி.. விவசாயிகளுக்கு குட்நியூஸ் சொன்ன முதலமைச்சர்…

புதுச்சேரியில் ரூ.13.8 கோடி விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்..

புதுச்சேரி சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.. இந்த கூட்டத்தொடரில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.. அதன்படி, புதுச்சேரியில் விவசாயிகள் கடன் ரூ.13.8 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

மேலும் மரபணு குறைபாடு உள்ள குழந்தைகளுக்க்கு மாதம் தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.. மஞ்சள் நிற ரேஷன் அட்டை தாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.. புதுச்சேரியில் புதிய சட்டமன்ற கட்ட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.. அதிகாரிகள் பல கேள்விகளை கேட்டு கோப்புகளை தாமதப்படுத்தாமல் இருந்தால் புதுச்சேரி வளர்ச்சியடையும் என்றும் அவர் கூறியுள்ளார்..

Maha

Next Post

மீண்டும் அதிகரிக்கிறதா கொரோனா..? சென்னை விமான நிலையத்தின் திடீர் உத்தரவால் பரபரப்பு..

Tue Aug 30 , 2022
சென்னை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றின் ஆரம்பத்தில் இருந்தே சென்னை விமான நிலையத்தில் பயணிகள், ஊழியர்கள், விமான நிலையத்துக்கு வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமல்படுத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளால், கொரோனா வைரஸ் பாதிப்பு, நாடு முழுவதும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், சென்னை விமான நிலையத்தில் முககவசம் அணிபவர்கள், சமூக இடைவெளி கடைபிடிப்பது […]

You May Like