fbpx

நாளை முதல் அரசு பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகளை வாங்கக்கூடாது..! அரசுப் போக்குவரத்துக் கழகம்…

2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 19ஆம் தேதி அறிவித்தது.மேலும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை எந்த ஒரு வங்கிக் கிளையிலும்மாற்றிக் கொள்ள முடியும் என்றும் இதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30அம்ம தேதி எனவும் தெரிவித்திருந்தது. அக்டோபர் 1-ம் தேதி முதல் வங்கியில் ரூ.2,000 நோட்டுகளை செலுத்த இயலாது

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற காலக்கெடு முடிவடையுள்ள நிலையில் அரசு போக்குவரத்துக் கழகம் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை ரூ.2,000 நோட்டுகளை பேருந்துகளில் பெற்று வந்த நிலையில், செப்டம்பர் 28ஆம் தேதி முதல் ரூ.2,000 தாள்களை பெறக் கூடாது என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Kathir

Next Post

28-ம் தேதி முதல் அமல்...! இதற்கும் நடத்துனர் தான் பொறுப்பேற்க வேண்டும்...! போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு...!

Wed Sep 27 , 2023
அனைத்து கிளை மேலாளர்களும் 28.09.2023 அன்று முதல் நடத்துனர்கள், பயணிகளிடமிருந்து ரூ.2000 நோட்டு தாள்களை பயணத் தொகையாக பெறக்கூடாது. அப்படி நடத்துனர்கள் யாரேனும் ரூ.2000 நோட்டுத் தாள்களை பயணிகளிடமிருந்து பெற்றிருந்தால் சம்பந்தப்பட்ட நடத்துனரே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில்; ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி 30.09.2023 அன்றுவரை ரூ.2000 நோட்டுக்கள் வங்கியில் செலுத்த இயலும். மேலும் 01.10.2023 முதல் ரூ.2000 […]

You May Like