fbpx

குட் நியூஸ்…! இவர்கள் அனைவருக்கும் ரூ.5,000 ஊதியம் உயர்வு…! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!

முனைவர் பட்டம், முதுநிலைப் பட்டம் பெற்றவர்களுக்கு 20,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளராக நியமிக்கப்பட்டு வந்தனர். தற்போது அவர்களுக்கான ஊதியம் கூடுதலாக 5000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு கலை அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதலாக ரூ .5,000 ஊதியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடந்த துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பல்கலைக்கழக விதிகளை மாற்றி ஒரே மாதிரியான ஊதியம், தகுதி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், கவுரவ விரிவுரையாளர்களின் மாத ஊதியம் ரூ.20,000 லிருந்து ரூ .25,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

புதுமைப் பெண் திட்டம்...! அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை...! தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்...!

Sun Jul 30 , 2023
புதுமைப் பெண் திட்டம் குறித்து தமிழக அரசு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்க, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை, மாதம் […]

You May Like