நகர்ப்புற ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான ரூ.60000 கோடி வட்டி மானிய புதிய திட்டத்துக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு செலவின நிதிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஓரிரு மாதங்களிலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்திலும் நடைபெற உள்ளன. இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு கடந்த மாதம் 18% குறைத்தது. அதனைத் தொடர்ந்து, வீட்டுக் கடன் வட்டி மானிய திட்டமும் அறிமுகமாக உள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 15ஆம் தேதி டெல்லியில் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கான வீட்டுக்கடன் வட்டியில் மானியம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.
நகர்ப்புற ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான புதிய ரூ.60,000 கோடி வட்டி மானியத்தை விரைவில் மத்திய அரசு வெளியிடும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன, இது தொடர்பாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு செலவின நிதிக் குழு (EFC) ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் அடுத்த ஐந்தாண்டுகளுக்குச் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தால், நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏறக்குறைய 25 லட்சம் குடும்பத்தினர் பயனடைவார்கள் எனத் தெரிகிறது.
புதிய திட்டம் PMAY-U இன் கீழ் CLSS திட்டத்தை மாற்றும் மற்றும் தொழிலாளர்-தீவிர கட்டுமானத் துறைக்கு ஊக்கமளிக்கும். ரூ.50 லட்சத்துக்கும் குறைவாக 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தக்கூடிய வீட்டுக்கடன் பெறுவோர் இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதி உடையவர்களாக இருப்பார்கள். அதேநேரம், மொத்தக் கடனில் ரூ.9 லட்சத்துக்கு மட்டும் 3 முதல் 6.5 விழுக்காட்டுக்கு உட்பட்ட வட்டி மானியம் வழங்கப்படும் எனத் தெரிகிறது. எஞ்சியுள்ள கடனுக்கு, வங்கி விதிக்கும் வட்டியை வாடிக்கையாளரே செலுத்த வேண்டியிருக்கும்.