ரஷ்ய அதிபர் புடின் ஓராண்டுக்கு மேல் உயிருடன் இருக்க மாட்டார் என்று முன்னாள் எம்பி இலியா பொனோமரேவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது.. இதனிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.. புடினுக்கு ஆபத்தான நோய்கள் இருப்பதாகவும், அவர் நீண்ட காலம் உயிருடன் இருக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் உயிர் வாழ மாட்டார் என்று ரஷ்யாவின் முன்னாள் எம்பி இலியா பொனோமரேவ் தெரிவித்துள்ளார். மேலும் அக்டோபர் 7 ஆம் தேதி அவரது அடுத்த பிறந்த நாளை கொண்டாட மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்..
![](https://1newsnation.com/wp-content/uploads/2023/02/putin-1024x576.jpg)
இதுகுறித்து பேசிய அவர் “ 2014 இல் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியாவை உக்ரைன் மீட்டெடுக்கும் போது புடினின் வீழ்ச்சி தொடங்கும். உக்ரைன் ராணுவம் ‘ஒரு நாள் அல்லது இன்னொரு நாள்’ கிரிமியாவிற்குள் நுழையும்.. அது புடினின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும். இப்போது புடின் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட விதத்தில், ராணுவ தோல்வியை அவரால் தக்கவைக்க முடியாது,” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் “ புடின் வீழ்ச்சியடையும் போது, அவருக்கு பதிலாக கார்பன் நகலை மாற்றக்கூடாது.. இல்லையெனில் ரஷ்யா மீண்டும் தாக்கும்.. உக்ரைனுடனான போரைப் பற்றி பேசுகையில், புடினுக்கு போரில் தோற்றுப்போவது தெரியும், ஆனால் இன்னும் தனது படைகள் வெற்றி பெறும் என்று நம்புகிறார்..” என்று தெரிவித்தார்..
கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு எதிராக வாக்களித்த ஒரே எம்.பி. இலியா பொனோமரேவ் தான்.. மேலும் புடின் தேர்தலில் மோசடி செய்ததாக வெளிப்படையாக அவர் குற்றம் சாட்டினார். ஆனால் தனது கடமைகளை சரியாக செய்யாததற்காக அவர் நாடுகடத்தப்பட்டர்.. 2016 முதல் உக்ரைனில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..