fbpx

விவசாயிகளுக்கு வேதனையான செய்தி..!! தென்மேற்கு பருவமழை வலுவிழந்தது..!! வானிலை மையம் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

தென்மேற்கு பருவமழை வலுவிழந்து விட்டதாகவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 9% குறைவான மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாகவும் சென்னை வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு பொதுவாக விவசாயம் மற்றும் குடிநீருக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களை நம்பியே இருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு என்று பெரிய ஆறுகள் கிடையாது. தாமிரபரணி மட்டுமே தமிழ்நாட்டில் உதித்து மாநிலத்திற்குள்ளேயே முடிகிறது. தாமிரபரணி தண்ணீர் நெல்லை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் கிராமங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

இந்நிலையில், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடப்பாண்டு குறைவான மழையே பதிவாகி இருக்கிறது. கேரளாவில் 47% பருவமழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இயல்பை விட 9% மழை குறைவாக பெய்துள்ளதாக வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பூமியில் நேரடியாக சூரிய கதிர்கள் விழுவதால் வெப்பம் இயல்பை விட அதிகரித்துள்ளதாகவும், இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தென் மேற்கு பருவமழை வலுவிழந்து இயல்பை விட குறைவாக மழை பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அடுத்து வரும் 2, 3 தினங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

Chella

Next Post

எனக்கு கிடைக்காத நீ யாருக்குமே கிடைக்கக்கூடாது….! காதலியை கொலை செய்ய முயன்ற இளைஞர் இறுதியில் என்ன செய்தார் தெரியுமா….?

Tue Aug 29 , 2023
தன்னை தொடர்ந்து, காதலிக்க மறுத்த தன்னுடைய காதலியை கொலை செய்ய முயற்சித்த இளைஞர் ஒருவர், பின்னர் அவரே காதலியை மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடக மாநிலம் ராம்நகரைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும், சேத்தன் (22) என்ற இளைஞரும் நட்பாக, நெருங்கி பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே, காதலாக மாறியது. பின்னர் இந்த காதல் விவகாரம் பெண் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிய […]

You May Like