fbpx

தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் அதிரடி உயர்வு..!! வெளியான முக்கிய அரசாணை..!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் 7,500 ரூபாயிலிருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நல இயக்குநர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பணியாற்றும் 221 தற்காலிக ஆசிரியர்களும், காலியாக உள்ள 194 பணியிடங்களுக்குத் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்களும் பயனடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே சம்பளம்..!! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Fri Mar 17 , 2023
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கிராமப்புறங்களில் ஏழை, எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் வருடத்தில் 100 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது. இந்நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் பெறுவதற்கு ஆதார் எண்ணை கொண்டு சம்பளம் வழங்கும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய ஊரக மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது. இத்திட்டத்தில் இதுவரை 42 லட்சம் […]

You May Like