fbpx

தபால் நிலையங்கள் மூலம் தேசியக் கொடி விற்பனை

மத்திய அரசு இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவதை ஊக்குவிக்கும் திட்டத்துடன் புதிய சேவையை துவங்கியுள்ளது. இந்த வருடம் சுதந்திர தினத்திற்கு பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் அரசுக்கும் மக்களுக்குமான நேரடி தொடர்பை உருவாக்கும் ஒரு திட்டத்தை இந்திய தபால் துறை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு குடிமகனும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கக்கப்பட்ட ஹர்கர் திரங்கன் அபியான் கீழ் தபால்துறை அதன் 1.60 லட்சம் தபால் நிலையங்கள் மூலம் தேசியக் கொடிகளை விற்பனை செய்ய உள்ளது.

ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான காலக்கட்டத்தில் இந்திய மக்கள் தேசியக் கொடியை தபால் துறையின் “ePostOffice” வசதி மூலம் வாங்கலாம். உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் தபால் துறை அலுவலகத்தில் இப்போதே தேசிய கொடி விற்பனையை துவங்கியுள்ளது.

Maha

Next Post

என்னது... போதையில் இருந்து விடுபட்டா அரசு வேலையா?

Sun Aug 6 , 2023
சென்னை கண்ணகி நகரில் “நட்புடன் உங்களோடு” போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது பேசிய அமைச்சர் போதைக்கு அடிமையாகி இந்த மையத்தின் வாயிலாக அதில் இருந்து விடுபட்டு, அவர்களுக்கு வேறு விதமான உடல்நல பாதிப்புகள் இல்லாத பட்சத்தில் தகுதியின் அடிப்படையில் தேசிய நலவாழ்வு குடும்பம் சார்பில் தற்காலிக அரசு வேலை வழங்கப்படும். குறிப்பாக அரசின் தற்காலிக பணியிடங்களை நிரப்பும்போது போதையில் இருந்து விடுபட்ட […]

You May Like