fbpx

சேலம்| நூல் வியாபாரியின் வீட்டில் 50 பவுன் நகைகள் கொள்ளை…..! காவல்துறையினர் தீவிர விசாரணை….!

சேலம் மறவனேரி 7வது குறுக்குத் தெருவில் இருக்கின்ற சின்னையா பிள்ளை தெருவை சேர்ந்த நூல் வியாபாரி திருநாவுக்கரசு(66) இவருடைய மனைவி மல்லிகா(62) இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். மூவரும் தனித்தனியே வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று இரவு சூரமங்கலத்தில் உறவினர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தம்பதிகள் இருவரும் வீடு திரும்பினர். மல்லிகா அணிந்திருந்த நகைகளை கழற்றி அருகே இருந்த கண்ணாடி நேசையின் மீது நகை பெட்டியை வைத்துவிட்டு உறங்குவதற்காக சென்று விட்டனர்.

அதிகாலை 3 மணி அளவில் வீட்டு படுக்கை அறைக்குள் சத்தம் கேட்டதால் மல்லிகா மற்றும் திருநாவுக்கரசு உள்ளிட்ட இருவரும் விழித்துப் பார்த்தனர். அப்போது ஒரு மர்ம நபர் நகைப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே ஓடியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் கூச்சலிட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர் தப்பிச் சென்று விட்டார்.

இது தொடர்பாக அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் திருநாவுக்கரசு வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு, மாநகர காவல் துறை துணை ஆணையர் கௌதம் கோயல், உதவி ஆணையர்கள் பாபு, அசோகன், சரவணகுமார் உள்ளிட்டோர் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அதாவது காவல்துறையினரின் விசாரணையில் வீட்டின் முன்புற கதவை உடைத்து உள்ளே புகுந்த அந்த மர்ம நபர் 50 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்று விட்டது தெரிய வந்தது.

சம்பவ இடத்தில் தடயவியல் துறை நிபுணர்கள், கைவிரல் ரேகைகளை பதிவு செய்தனர். அதோடு அந்தப் பகுதியில் இருக்கின்ற கண்காணிப்பு கேமராக்களின் பதிவை கொண்டு காவல்துறையினர் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பிச்சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Post

மதுராந்தகம் | பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை பயன்படுத்தி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்…..! மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை…..!

Fri Jun 2 , 2023
சித்தாமூர் காவல் நிலையத்தில் தனி பிரிவின் சிறப்பு உதவி ஆய்வாளராக பக்தவச்சலம் என்பவர் பணியாற்றி இருந்தார். இவர் கடந்த பல வருடங்களாக இது பணிபுரிந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2018 ஆம் வருடம் ஜமீன் என்ற ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவபாலன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது முதுகரை பகுதியில் விபத்துக்கு உள்ளானதாகவும், இதில் எதிரே வந்த நபர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு […]

You May Like