fbpx

78 வயது மூதாட்டியை புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம்….! சேலம் அருகே காமக்கொடூரனை தேடும் காவல்துறை….!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள இருப்பாளி ஊராட்சி பகுதியை சேர்ந்த மூதாட்டி ராமாயி(78) இவருடைய கணவர் சில வருடங்களுக்கு முன் இயற்கை எய்திவிட்டார். இவருக்கு மூன்று மகன்கள் இருக்கின்ற நிலையில், மூத்த மகன் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். மற்ற இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.


இந்த நிலையில் தான் ராமாயி தன்னுடைய சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது. ஆகவே கடந்த 21 ஆம் தேதி அந்த பகுதியில் தெருக்கூத்து நடைபெற்றுள்ளது. அதை பார்த்துவிட்டு ராமாயி தனியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பூசாரிமூப்பன் வளவு பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது, அவரை வழிமறித்த ஒரு வாலிபர் மூதாட்டியின் வாயை பொத்தி வலுக்கட்டாயமாக கட்டாயமாக புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். போதையில் மூதாட்டியை அவர் தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி மயக்கம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து, அவரை மீட்டு எடப்பாடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் யார் என்று காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்

Next Post

ஏடிஎம் இயந்திரத்தையே ஏமாற்றிய டைல்ஸ் கடைக்காரர்..!! வங்கி ஊழியர்கள் ஷாக்..!! உடனே விரைந்த போலீஸ்..!! பரபர சம்பவம்..!!

Tue May 23 , 2023
தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது கிருஷ்ணா நகர் என்ற பகுதி. இங்கு தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது.. இந்த வங்கியின் வாசலிலேயே ஏடிஎம் இயந்திரமும் இருக்கிறது. அதில் பணத்தைச் செலுத்தவும், பணம் எடுக்கவும் தனித்தனியே இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. சம்பவத்தன்று மாலை, வங்கித்தரப்பினர் ஏடிஎம் மிஷினில் இருந்து பணத்தை எடுக்க வந்துள்ளனர்.. அப்போதுதான், 500 ரூபாய் தாள்களில் 8 கள்ளநோட்டுகள் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்து போனார்கள்.. அதில் […]

You May Like