fbpx

RIP: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் காலமானார்!…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சாந்தன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இலங்கை தமிழர் சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த அனைவரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். இதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தனும் விடுதலை செய்யப்பட்டார்.

ஆனால் சாந்தன் இலங்கை தமிழர் என்பதால், திருச்சியில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டார். தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரி வந்தார் சாந்தன்.

இந்நிலையில், சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டார். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.

Kokila

Next Post

Court: 5 மாவட்ட ஆட்சியர்களும் ஆஜராகவேண்டும்!… சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!

Wed Feb 28 , 2024
Court: மணல் குவாரி சோதனை விவகாரத்தில் அமலாக்கத்துறையின் சம்மனுக்கு ஆஜராகி பதிலளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், சம்மனுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கும் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் மணல்குவாரிகளில், அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக மணல் எடுத்து விற்பனை செய்ததாகவும், மணல் குவாரிகள் மூலம் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகவும் எழுந்த புகாரை தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழகத்தின் பல இடங்களில் சோதனை […]

You May Like