fbpx

அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு உதவித்தொகை..? நடிகர் விஜய் எடுத்த அதிரடி முடிவு..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தன்னுடைய ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய நிலையில், அதன் மூலம் பல்வேறு நபர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார். நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் இயக்கமாக மாறும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் புஸ்ஸி ஆனந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டது, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது மற்றும் நடிகர் விஜய் அடிக்கடி மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேசுவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் கண்டிப்பாக விரைவில் அரசியலில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்த 10,000 மாணவர்களுக்கு நடிகர் விஜய் உதவித்தொகை வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் சென்னை அல்லது திருச்சியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேலும், இதனால் நடிகர் விஜய் கிட்டத்தட்ட அடுத்த சட்டசபை தேர்தலில் போட்டியிடுவாரா என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Chella

Next Post

மோக்கா புயல்..!! 9 துறைமுகங்களுக்கு எச்சரிக்கை..!! இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!!

Thu May 11 , 2023
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக உருவெடுத்துள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் படிப்படியாக வடகிழக்கே நகர்ந்து நாளை மாலை மத்திய வங்கக் கடலில் மிகத்தீவிர சூறாவளிப் புயலாக வலுவடையும். ஈரப்பதத்தை புயல் ஈர்த்தப்படி வடக்கு நோக்கி செல்வதால், இனி தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது. இந்நிலையில், வங்கக் கடலில் உருவான புயல் மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து […]

You May Like