fbpx

வாவ்…! 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளம் விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை…! எப்படி விண்ணப்பிப்பது…?

இளம் விளையாட்டு வீரர்களுக்கு இந்திய உணவுக் கழகம் சார்பில் வழங்கப்படும் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

உதவித் தொகை பெற தகுதி வாய்ந்த இளம் விளையாட்டு வீரர்களிடமிருந்து இந்திய உணவுக் கழகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. 2024-25 -ஆம் ஆண்டிற்கு 15-18 மற்றும் 18-24 வயதுக்குட்பட்ட கீழ்க்கண்ட விளையாட்டுக்களில் உதவித்தொகை பெறுவதற்கு தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்களிடமிருந்து இந்திய உணவுக் கழகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

எந்தெந்த விளையாட்டு…?

விண்ணப்பதாரர்கள் வில்வித்தை, தடகளம், பூப்பந்தாட்டம், குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கபடி, டேபிள் டென்னிஸ், நீச்சல், கூடைப்பந்து, பளு தூக்குதல் ஆகிய விளையாட்டுகளில் திறன்பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை secyzspc.sz@gov.in என்ற மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு https:fci.gov.in/zone/south-zone/view/SPORTS என்ற வலைத்தளத்தைப் பார்வையிடவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 28.02.2024 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Vignesh

Next Post

நெல்லை, கோவையில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை..!! அதிகாலையிலேயே பரபரப்பு..!!

Sat Feb 10 , 2024
நெல்லை மற்றும் கோவையில் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லை ஏர்வாடியைச் சேர்ந்த பக்ருதீன் என்பவர் வீட்டில் பரத் நாயக் என்ற தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். பக்ருதீன் என்பவர் பழனிபாபா அரசியல் எழுச்சி கட்சி கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் ஆவார். கோவை மாவட்டம் உக்கடம் அல்அமீன் காலனி பகுதியில் வசிக்கும் ரகுமான் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை […]

You May Like