fbpx

மகிழ்ச்சி…! இளங்கலை கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை…! நவம்பர் 13-ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாள்…!

இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ / மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ/மாணவியருக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

நடப்பாண்டில் புதுப்பித்தல் மாணக்கர்கள் https://ssp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் Student Login சென்று ஆதார் எண் அளித்து e-KYC Verification செய்ய வேண்டும் இதில் ஏதாவது இடர்பாடு ஏற்படும் பட்சத்தில் தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரை ஆதார் எண் நகலுடன் அணுகவும். புதுப்பித்தலுக்கான (Renewal) விண்ணப்பங்கள் 18.11.2023க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ அணுகவும் அல்லது 9445477826 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

சென்னையில் பதிவு செய்யப்படாத மகளிர் விடுதிகளுக்கு 30-ம் தேதி வரை தான் டைம்...! ஆட்சியர் கொடுத்த எச்சரிக்கை...!

Sat Oct 21 , 2023
சென்னையில் பல்வேறு மகளிர் விடுதிகள் பதிவு செய்யப்படாமல் இயங்கி வருவதாக தொடர்ந்து அரசுக்கு புகார்கள் வந்த வண்ணமாக இருக்கின்றன. இந்த நிலையில் அதனை சரி செய்யும் விதமாக மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அதன்படி சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்களை 30-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; […]

You May Like