fbpx

ஏப்ரல் 30 வரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி…! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு…!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் வரும் ஏப்ரல் 4ம் தேதி தொடங்க உள்ளது.

தமிழக மாநிலப் பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. இந்த தேர்வினை 7 ஆயிரத்து 518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் 145 பேர் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவர்கள் 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்களில் தேர்வு எழுதியுள்ளனர்.

தேர்வுகளின் விடைத்தாள்கள் அந்தந்த மாவட்டங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 80-க்கும் மேற்பட்ட விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு இன்று முதல் பிரித்து அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன் பின்னர் விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஏப்ரல் 4-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை முதன்மை விடைத்தாள் திருத்துபவர்களாக நியமிக்கப்படும் அனுபவம் வாய்ந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தம் செய்ய உள்ளனர்.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் வரும் ஏப்ரல் 4ம் தேதி தொடங்க உள்ளது. 12-ம் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 19 தொடங்கி ஏப்ரல் 30 வரை நடக்க உள்ளது என தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.

English Summary

School Education Department Announcement: 12th Class Public Examination Answer Sheet Correction Work from April 19 to 30…!

Vignesh

Next Post

பழங்குடியினரை ஏமாற்றி கைலாசாவை நிறுவிய நித்யானந்தா!. மும்பையை விட 6.5 மடங்கு நிலத்தை அபகரித்த பகீர் சம்பவம்!

Wed Mar 26 , 2025
Nithyananda, who cheated the tribals and established Kailash!. Pakir, who grabbed land 6.5 times the size of Mumbai!

You May Like