fbpx

பள்ளி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர்…..! பேருந்து நிலையத்தில் திக்கு தெரியாமல் நின்ற சிறுமி நடந்தது என்ன…..?

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்துள்ள ஒடுக்கத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (25) வெல்டிங் தொழில் செய்து வரும் இவர் அந்த பகுதியில் சென்ற சில மதங்களாக காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் கடந்த 22 ஆம் தேதி அந்த மாணவி ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று, குடியாத்தத்தில் இருக்கின்ற ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவருடைய வீட்டிற்கு செல்லாமல் அவருடைய நண்பர் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

தன்னுடைய நண்பர் வீட்டில் வைத்து அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அவர், அதற்கடுத்த நாள் காலையில் குடியாத்தம் பேருந்து நிலையத்தில் அந்த பள்ளி மாணவியை அழைத்துச் சென்று சற்று நேரத்தில் வருகிறேன் என்று தெரிவித்துவிட்டு விஸ்வநாதன் அங்கிருந்து நழுவி பின்னர் தலைமறைவானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பள்ளி மாணவி தன்னுடைய பெற்றோருக்கு செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

ஆகவே சிறுமியை மீட்ட பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த விஸ்வநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Post

ஊட்டிக்கு பைக்கில் ரெய்டு சென்ற வாரிசு பட நடிகர்..!! விபத்தில் வலது காலை இழந்த பரிதாபம்..!!

Tue Jun 27 , 2023
கன்னட திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் எஸ்.ஏ.ஸ்ரீனிவாஸ். இவருக்கு சூரஜ் குமார் என்கிற மகன் உள்ளார். இவரும் தற்போது சினிமாவில் நடிக்க களமிறங்கியுள்ளார். சினிமாவுக்காக தனது பெயரை துருவன் என மாற்றிக்கொண்ட அவர், பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா என்கிற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அனூப் ஆண்டனி இயக்கிய இப்படம் சில பிரச்சனைகளால் ரிலீஸ் செய்யப்படவில்லை. இதையடுத்து, ரதம் என்கிற திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த […]

You May Like