விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகே உள்ள பரசுரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் துர்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). எட்டாம் வகுப்பு படித்து வரும் இவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, சிறுவன் துர்க்காவிடம் நாம் தனிமையில் இருக்க வேண்டும் என்று கூறி கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்த நிலையில், கரும்பு தோட்டத்திற்கு மணிகண்டன் என்ற இளைஞர் ஒருவன் வந்துள்ளான்.
காதலர்கள் இருவரும் தனிமையில் இருப்பதை பார்த்த மணிகண்டன், சிறுவனை கரும்பால் அடித்து துரத்தி உள்ளான். மேலும், சிறுமி துர்காவிடம் பாலியல் வண்புனர்வில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டனர். விசாரணையில் பரசுரெட்டிப்பாளையத்தை சேர்ந்த இளைஞர் மணிகண்டன் சிறுமியை மிரட்டி பாலியல் வன்புனர்வில் ஈடுபட்உறுதியானது.
இதையடுத்து, போலீசார் சிறுமியிடம் பாலியல் வன்புனர்வில் ஈடுபட்ட மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.