fbpx

’முதல்வர் எழுதிய புத்தகத்தை படிக்க ஆர்வம் காட்டும் சீமான்’..! ஏன் தெரியுமா?

முதலமைச்சர் முக.ஸ்டாலின் எழுதியுள்ள திராவிட மாடல் புத்தகத்தை வாங்கி படிக்க ஆர்வமாக உள்ளதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திராவிட மாடம் என்பது ஒரு வேடிக்கை. திராவிடம், திராவிடம் என பேசுவதற்கு காரணமே நாங்கள் தான். பிரபாகரனின் பிள்ளைகளாகிய நாங்கள் வந்த பிறகே திரவிடத்தை அதிகமாக பேசுகின்றனர். திராவிட மாடல் என்ற புத்தகம் வந்தால் நானும் வாங்கி படிக்க ஆர்வமாக உள்ளேன்” என்றார்.

’முதல்வர் எழுதிய புத்தகத்தை படிக்க ஆர்வம் காட்டும் சீமான்’..! ஏன் தெரியுமா?

இதைத்தொடர்ந்து ராகுல் காந்தியின் நடைபயணம் குறித்து பேசிய அவர், ”ராகுல்காந்தி அரசியல் செய்கின்றாரா என்று கேள்வி எழுப்பினார். ராகுல்காந்தியால் சொந்த தொகுதியிலேயே நின்று வெல்ல முடியவில்லை. எதிர்கட்சியாக காங்கிரஸ் இயங்கவில்லை என குற்றம்சாட்டினார். 50 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்சிசெய்து கொண்டு வரமுடியாத மாற்றத்தை, 5 மாதங்களில் ராகுல்காந்தி நடைபயணம் செய்து மாற்றிவிடுவாரா? என்றும் சீமான் கேள்வி எழுப்பினார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாஜகவினர் ஆளுநரை சந்தித்துள்ளனரே என்ற கேள்விக்கு, திமுக, பாஜக இருவருக்கும் வேலை இல்லை. அடிக்கடி இதுபோன்று வேடிக்கை காட்டுவார்கள் நமக்கு நிறைய வேலை இருக்கு, அவர்களை பற்றி பேச வேண்டாம்” என தெரிவித்தார்.

Chella

Next Post

உயர்ந்திருப்பது மின் கட்டணமா..? நிர்வாக திறமையின்மை கட்டணமா..? - எடப்பாடி பழனிசாமி

Sun Sep 11 , 2022
தமிழ்நாட்டில் மின்சார கட்டண உயர்வு நடுத்தர மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் கட்டணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சி, வால்பாறையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முன்னதாக அவிநாசியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், ”இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உங்கள் பகுதிக்கு முதன்முறையாக வந்துள்ளேன். எவ்வளவோ தடைகளை தாண்டி தொண்டர்கள் ஆதரவோடு பொதுச்செயலாளராக […]

You May Like