fbpx

கண்ணாடிக்கு பதில் நெகிழி பாட்டிலில் மது விற்பனை..? சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் சொன்னது என்ன..?

மதுவை நெகிழி பாட்டிலில் விற்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரதாப் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், மதுபானங்களை கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக நெகிழி பாட்டில்களில் விற்க 1996ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்படி, பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து மது விற்பனை செய்யப்பட்டால் தீங்கு ஏற்படும் என்பதால் அந்த உத்தரவை ரத்து செய்யுமாறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

கண்ணாடிக்கு பதில் நெகிழி பாட்டிலில் மது விற்பனை..? சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் சொன்னது என்ன..?

இந்த வழக்கு குறித்து, டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மதுவை கண்ணாடி பாட்டிகளில் விற்பனை செய்வதென்பது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு என்றும், அதற்கு எதிராக வழக்கு தொடர முடியாதென்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், மதுவை நெகிழியில் விற்கும் திட்டம், தற்போது வரை இல்லை என்றும் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Chella

Next Post

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை எப்போது..? ரயில்வே நிலைக்குழு பரிந்துரை..!

Thu Aug 11 , 2022
ரயில்களில் மூத்த குடிமக்கள் பயணம் செய்வதற்கான கட்டண சலுகைகளை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என ரயில்வே அமைச்சகத்திற்கு ரயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. ரயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் ராதாமோகன் சிங் தலைமையிலான ரயில்வேத்துறை நாடாளுமன்ற நிலைக்குழு, ரயில்வே அமைச்சகத்திற்கு பரிந்துரை ஒன்றை அளித்துள்ளது. அந்த பரிந்துரையின்படி, படுக்கை வசதி உள்ள ஸ்லீப்பர் பெட்டிகள் மற்றும் 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிகளில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு உடனடியாக கட்டண […]

You May Like