மதுவை நெகிழி பாட்டிலில் விற்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரதாப் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், மதுபானங்களை கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக நெகிழி பாட்டில்களில் விற்க 1996ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்படி, பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து மது விற்பனை செய்யப்பட்டால் தீங்கு ஏற்படும் என்பதால் அந்த உத்தரவை ரத்து செய்யுமாறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு குறித்து, டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மதுவை கண்ணாடி பாட்டிகளில் விற்பனை செய்வதென்பது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு என்றும், அதற்கு எதிராக வழக்கு தொடர முடியாதென்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், மதுவை நெகிழியில் விற்கும் திட்டம், தற்போது வரை இல்லை என்றும் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.