நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது, 3 தவணைகளாக பிரித்து ரூ.2 ஆயிரம் வீதத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. பிஎம் கிசான் திட்டத்தில் இதுவரை 12 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், 13-வது தவணைக்காக பணத்திற்கு விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், பிஎம் கிசான் திட்டத்தின் 13ஆவது தவணைத் தொகை இன்று (ஜனவரி 23) விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் 3 தவணைகளில் 2,000 ரூபாய் ரொக்கம் டெபாசிட் செய்யப்படும். இதற்கிடையே, பிஎம் கிசான் நிதியை ரூ.6,000-இல் இருந்து ரூ.8 ஆயிரம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசு விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.