fbpx

கர்நாடகாவில் பரபரப்பு… பாஜக இளைஞரணித் தொண்டர் படுகொலை.. எம்.பி. காரை குலுக்கி ஆர்ப்பாட்டம்…!

கர்நாடகாவில், தட்சிண கன்னடா மாவட்டத்தின் பெல்லாரே பகுதியை சேர்ந்தவர் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணியை சேர்ந்த தொண்டர் பிரவீன் நெட்டார். இவரை பெல்லாரே பகுதியில் வைத்து மூன்று பேர் கொண்ட கும்பல் பைக் ஒன்றில் வந்து நேற்றிரவு படுகொலை செய்து விட்டு தப்பியோடினர். பிரவீன் இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இதனை கண்டித்து கர்நாடகாவின் பல பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், சில இடங்களில் அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளன. இதனையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர்.

இதில், பலருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. புட்டூர், கபடா மற்றும் சுல்லியா தாலுகாக்களில் இன்று முழு அடைப்புக்கு பாரதிய ஜனதா கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில், தட்சிண கன்னடா எம்.பி.யான நளீன் கட்டீல் என்பவர், காரில் வந்து கொண்டிருந்தபோது, காரை மறித்து பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில், அவரது காரை சூழ்ந்து கொண்டு, அதனை சாய்க்க முயன்றனர். காரை குலுக்கினர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Rupa

Next Post

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்..! சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு..!

Wed Jul 27 , 2022
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர், சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா […]
இபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பு..!! ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்துவோம்..!! சசிகலா அதிரடி

You May Like