சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் பயணிகளை இறக்கிவிட்டு பணிமனைக்கு சென்று கொண்டிருந்த போது, பேசின் பிரிட்ஜ் அருகே ஜனா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது. ஆகவே சம்பவ இடத்திற்கு வந்த ஊழியர்களின் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ரயிலின் 2 சக்கரங்களும் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். ரயிலில் ஓட்டுநரின் நடவடிக்கையின் காரணமாக, அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.