fbpx

செப். 26 முதல் அக். 9 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. மாநில அரசு அறிவிப்பு….

தெலுங்கானாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் செப்டம்பர் 26-ம் தேதி முதல் தசரா விடுமுறை அளித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை அறிவிக்கப்படுள்ளது.. அதன்படி அம்மாநிலத்தில் பதுகம்மா பண்டிகை செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 3 வரை கொண்டாடப்படும்.. அக்டோபர் 5 அன்று தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது… எனவே தெலுங்கானாவில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 9 வரை மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. தசரா விடுமுறை கிட்டத்தட்ட 14 நாட்களுக்கு இருப்பதால், அனைத்து மாணவர்களுக்கும் அக்டோபர் 10, 2 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு தசரா விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில் பண்டிகை தினத்திற்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டாலும், தெலுங்கானா போன்ற சில மாநிலங்களில் இன்னும் சில விடுமுறைகள் வழங்கப்படலாம். இருப்பினும், இதை அந்தந்த அரசு அல்லது பள்ளிகளால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும். எனவே, தசராவிற்கு அறிவிக்கப்பட்டுள்ள அல்லது அறிவிக்கப்படாத பள்ளி விடுமுறைகள் குறித்த அறிவிப்புகளுக்கு அனைவரும் தங்கள் கல்வி நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Maha

Next Post

சொத்துக்காக அண்ணனை தம்பியே அடித்துக் கொன்ற கொடூரம்... அதிர்ச்சி சம்பவம்..!

Wed Sep 14 , 2022
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி, வேலூர் கருக்கன்காட்டு தோட்டத்தில் வசித்து வரும் கனகராஜ் மகன் கனகசபாபதி (27). இவரது தம்பி கவியரசு (24). இவர்கள் இருவரும் விவசாய வேலை செய்து வந்தனர். இருவருக்கும் இடையே பூர்வீக சொத்து காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு கவியரசு மற்றும் அவரது நண்பர்கள் நவீன், மூர்த்தி ஆகியோர் கனகசபாபதியின் வீட்டிற்குள் நுழைந்து வீட்டின் […]

You May Like