தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்துகளில் முன்பதிவு காலம் 60 நாட்களில் இருந்து 90 நாட்களாக அதிகரிகரிக்கப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில், இன்று மதியம் 12 மணி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. தற்போது, இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்யும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகளிம் இமிருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில், பயணிகள் நீண்ட காலத்திற்கு முன்பே முன்பதிவு நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நடைமுறையில் உள்ள 60 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யலாம் என்பதை 90 நாட்கள் என உயர்த்தி 18 நவம்பர், 2024 மதியம் 12 மணி முதல் அமல்படுத்தப்படுகிறது. பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், பயணத்திற்கு https://www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரப்பூர்வ மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து சிரமமின்றி பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Read More : பெல் நிறுவனத்தில் வேலை..!! மாதம் ரூ.40,000 வரை சம்பளம்..!! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க..!!