fbpx

Sexual Harassment | பள்ளிகளில் தொடரும் பாலியல் தொல்லைகள்..!! பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த முக்கிய உத்தரவு..!!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் முக்கியமான ஒன்று என்றால் அது குழந்தைகளுக்கு நல்ல மற்றும் கெட்ட தொடுதல் (Good Touch, Bad Touch) பற்றி உங்கள் பிள்ளைக்கு சொல்லிக் கொடுப்பது தான். இது அவர்களின் உரிமைகளைப் புரிந்துகொள்வதற்கும், கவனமாகவும், நம்பகமான நபர்களின் உதவியை பெறுவதற்கும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. எனவே உங்கள் குழந்தைக்கு குட் டச் மற்றும் பேட் டச் குறித்து சொல்லிக் கொடுப்பது மிகவும் அவசியமானதாகும்.

இந்நிலையில் தான், மாணவர்களின் நலன் கருதி வருகிற 26ஆம் தேதி (புதன்கிழமை) அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அந்த கூட்டங்களில் பாலியல் தீங்குகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், குட் டச், பேட் டச் மற்றும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், பாலியல் தொல்லைகளில் இருந்து அவர்களை பாதுகாப்பது குறித்து விவாதிக்க வேண்டும். பிரசாரங்கள் வாயிலாக மாணவர்கள், பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட மாணவ – மாணவிகளுக்கு ஆதரவான சூழலை உருவாக்க வேண்டும். அதேபோல், பாலியல் தொடர்பான புகாரளிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : மக்களே..!! ஆவின் பூத்களில் பால் விற்பனை நேரம் மாற்றம்..!! சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு..!!

English Summary

To protect children from sexual harm, awareness should be created about good touch, bad touch, and the POCSO Act.

Chella

Next Post

தமிழக அரசு சார்பில் மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி...! ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு

Thu Mar 20 , 2025
Training for medical English exams on behalf of the Tamil Nadu government

You May Like