டெல்லியில் நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆண்டு விழா நிகழ்வில், தனது மகள் சுப்ரியா சுலேவை செயல் தலைவராக சரத் பவார் அறிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், மூத்த தலைவர்களான சுப்ரியா சுலே மற்றும் பிரபுல் படேல் ஆகியோரை கட்சியின் செயல் தலைவர்களாக அறிவித்துள்ளார். சரத் பவாரின் மருமகனும், மகாராஷ்டிர சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவருமான அஜித் பவார் முன்னிலையில், டெல்லியில் நடந்த கட்சியின் நிறுவன நாள் நிகழ்ச்சியில், சரத் பவாரின் மகள் சுலேவை செயல் தலைவராக அறிவித்தார்.
ஜூன் 10, 1999 இல் உருவாக்கப்பட்ட சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கடந்த 24 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. கட்சிக்கு செயல் தலைவர்கள் நியமனம் செய்வது இதுவே முதல் முறை. 82 வயதான சரத் பவார், மே 3 அன்று, கட்சியின் தேசியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார், ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு தனது முடிவை திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.