நம்முடைய நாட்டில் செம்மறி ஆடுகளாக இருந்தாலும் சரி, வெளிநாடு ஆடுகளாக இருந்தாலும் சரி, பசும் புல்லை மட்டும்தான் சாப்பிடும். ஆனால் கிரீஸ் நாட்டில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் அந்த நாட்டில் உள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த நாட்டில் கடந்த சில வருடங்களாக சில மருத்துவத்திற்காக கஞ்சா செடி பயன்படுத்தலாம் என்று அந்த நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியதாக தெரிகிறது.
இதன் காரணமாக, அந்த நாட்டில் சில வளர்ப்பு பிராணிகளும் இந்த கஞ்சா செடியை சாப்பிடும் நிகழ்வு அவ்வப்போது நடக்கிறது. ஆனால், இந்த கஞ்சா செடிகள் விலங்குகளுக்கும் மிகவும் ஆபத்தானவை என்று கூறப்படுகிறது. அதோடு இதனை சாப்பிடும் விலங்குகள் விஷத்தன்மையால் பாதிக்கப்பட்டு, உயிரிழக்ககிறது. இந்நிலையில் தான், தற்போது, துருக்கி, லிபியா, கிரீஸ் போன்ற நாடுகளில் பெய்த மழையின் காரணமாக, பல செம்மறி ஆடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதது.
ஆனால், இந்த வெள்ள பாதிப்புகளில் இருந்து தப்பித்து உயிர் பிழைத்த செம்மறி ஆடுகள் செய்யும் சேட்டைகளை தான் தற்போது தலை சுற்றலை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடுகள் பத்திரமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கஞ்சாவை சாப்பிட்டது மட்டும்மில்லாமல் அதன்பிறகு பல வினோதமான செயல்களில் ஈடுபட்டதாக ஆடு மேய்ப்பாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தோட்டத்தின் உரிமையாளர் தெரிவித்த கருத்தில், வெப்ப அலைகளால் பாதி பயிர்கள் அழிந்து விட்டன. இப்போது ஆடுகள் மீது கஞ்சா செடியை சாப்பிட்டு விட்டன. இதனை நினைத்து சிரிப்பதா அல்லது கவலைப்படுவதா என தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.