fbpx

சிவகங்கையில் அதிர்ச்சி..!! மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் சிறுவன் உள்பட இருவர் பலி..!!

சிவகங்கை மாவட்டம் சிராவயலில் ஆண்டுதோறும் தை மாதம் 3ஆம் நாள் பாரம்பரியமாக மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டு வருகிறது. புகழ் பெற்ற இந்த மஞ்சுவிரட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளும், மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், சிராவயலில் நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டியில் வலயபட்டியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் உயிரிழந்தான்.

காளை முட்டியதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பாஸ்கரன் என்ற அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அதேபோல், இதேபோல், மஞ்சுவிரட்டு போட்டியில் 35 வயதான இளைஞர் ஒருவர் மாடு முட்டியதில் உயிரிழந்தார். இதனால், சிராவயல் மஞ்சுவிரட்டில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 75 பேர் காயமடைந்துள்ளனர்.

Chella

Next Post

’ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றால் அரசு வேலை’..!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!!

Wed Jan 17 , 2024
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதி போட்டியான உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலில் கோயில் காளைகள் அவிழ்க்கப்பட்டு, பின்னர் தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்க்கப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் 6,099 காளைகளும், 1,784 வீரர்களும் முன்பதிவு செய்திருந்த […]

You May Like