fbpx

ஷாக்!. 4,000-க்கும் மேற்பட்ட சடலங்கள் திருட்டு!. சட்டவிரோத செயலால் சீன குற்றப்பிரிவு அதிர்ச்சி!

Dead Bodies Stolen: சீன நிறுவனம் ஒன்று பல் ஒட்டுதலுக்கு பயன்படுத்த எலும்புகளைப் பிரித்தெடுப்பதற்காக தகன அறைகள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து 4,000க்கும் மேற்பட்ட சடலங்களைத் திருடியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் அறிக்கையின்படி, கொரோனா காலத்தில் மக்கள் கொத்துக்கொத்தாக இறந்தனர். இதனால், இறந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் கொடுக்காமல் தகனம் செய்வது அதிகரித்தது. அப்போது, உயிரிழந்தவர்களின் சடலங்கள் நாட்டின் மிகப்பெரிய பயோ மெட்டீரியல் நிறுவனங்களில் ஒன்றான மாநிலத்துடன் தொடர்புடைய நிறுவனத்திற்கு விற்கப்பட்டன என்றும்

Shanxi Osteorad Biomaterial Co. மற்றும் Sichuan Hengpu Technology Co., ஆகியவற்றின் உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் சட்டவிரோதமான வழிகளில் 4,000 க்கும் மேற்பட்ட சடலங்களைப் பெற்றதாகவும் பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ஒருவர் இந்த வழக்கின் தகவலை ஆகஸ்ட் 8 ஆம் தேதி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இந்த சடலங்களை விற்றதன் மூலம் 2015-2023 வரை அந்த நிறுவனம் $53 மில்லியன் சம்பாதித்தாக வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இந்த சடலங்கள் கடத்தல் சம்பவம் குறைந்தது ஏழு மாகாணங்கள் மற்றும் ஏறக்குறைய ஒரு டஜன் இடங்களில் பரவியுள்ளது. அங்கு இறந்த உடல்கள் மாற்றப்பட்டன, இந்த வழக்கில் இறுதிச் சடங்கு மேலாளர்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவன பங்குதாரர்கள் என குறைந்தது 75 பேர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த அறிக்கை நேற்று( வியாழன்) சிசிடிவி மூலம் சீன அரசு ஒளிபரப்பு செய்தது. ஆனால் சில மணிநேரங்களுக்குப் பிறகு அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாங்க்சியின் வடக்கு மாகாணத்தின் தலைநகரான தையுவானில் உள்ள அதிகாரிகள், எலும்புகள் அலோஜெனிக் எலும்பு மாற்று அறுவை சிகிச்சையை உருவாக்க பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவதைப் பரிசீலித்து வருவதாக சட்ட நிறுவனத்தின் தலைவர் யி ஷெங்குவா தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞரின் சமூக ஊடகப் பதிவின்படி, Shanxi Aorui Biomaterials என்ற வணிகமானது, Shandong, Guangxi மற்றும் Sichuan மாகாணங்களில் இருந்து இறந்த உடல்கள் மற்றும் கைகால்களை அங்கீகாரம் இல்லாமல் வாங்கி அவற்றை எலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், நிறுவனம் 380 மில்லியன் யுவான் (53 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) சம்பாதித்தது,

Readmore: உடலுறவின்போது அழும் பெண்கள்..!! என்ன காரணம் தெரியுமா..? அவர்களே கூறிய உண்மை..!!

English Summary

Over 4,000 dead bodies stolen from crematoriums, medical labs: Chinese crime ring accused of illegally harvesting corpses for bone grafts

Kokila

Next Post

Tn Govt: அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைய கூடாது...! கல்வித்துறை அதிரடி உத்தரவு...!

Sat Aug 10 , 2024
The number of students in government schools should not decrease

You May Like