பண்டிகை தினங்களை முன்னிட்டு மது விற்பனைக்கு 4 நாட்கள் தடை விதித்துள்ளது டெல்லி அரசு. டெல்லி அரசு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மது விற்பனை தடை செய்யும் நாட்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகிறது, அந்த வகையில் ஜூலை -செப்டம்பர் மாதங்களில் 4 நாட்களுக்கு மது விற்பனை தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின் படி, ஜூலை 29 – மொகரம் பண்டிகை, ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம், செப்டம்பர் 7 – கிருஷ்ண ஜெயந்தி மற்றும் செப்டம்பர் 28 – மிலாடி நபி ஆகிய பண்டிகை நாட்களில் டெல்லியில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.