fbpx

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்… டாஸ்மாக் நேரம் மாற்றமா!!! முழு விவரம் என்ன?…

அரசு டாஸ்மாக்கின் கீழ் தமிழகத்தில் மதுபான விற்பனை செயல்படுத்தப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பதற்காக டாஸ்மாக் நடத்தக்க வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் மதுபான விற்பனையை அரசு மேற்கொண்டுள்ளது குறித்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் இருக்க தான் செய்கிறது. மேலும் தமிழகத்தில் முழுமையாக மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசு புதிதாக டாஸ்மாக் கடைகளை எங்கும் அமைக்காது என்றும், கடைகளுக்கான இடம் மாறுதல் மட்டுமே செய்யப்படும் என்றும், டாஸ்மாக் திறக்கும் நேரத்தை குறைப்பதாகவும் கூறியது. அதன்படி காலை 11 மணி முதல் இரவு10 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது

இந்நிலையில், டாஸ்மாக் மதுபான விற்பனை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் மது விற்பனை நேரத்தை இனி பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை தமிழக அரசு மாற்றுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கான பதிலினை தமிழக அரசு விரைவில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வழக்கை டிசம்பர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Kathir

Next Post

முகத்திலுள்ள தழும்புகள் மற்றும் தேவையற்ற அழுக்குகளை அகற்றி, பளபளப்பாக மாற்றும்...

Tue Nov 29 , 2022
நாம் சாதாரணமாக நினைக்கும் சோளத்தில் வைட்டமின் பி கொண்ட சத்துகள் மிகவும் நிறைந்துள்ளது. இதன் வேலையே நரம்பு மண்டலங்களை சரியாக சீர்படுத்தி அதன்மூலம் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. இதனை தொடர்ந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு போலிக் அமிலம் குறைவாக இருந்தால், பிறக்கும் குழந்தைகள் குறைந்த எடையில் பிறக்கின்ற வாய்ப்புக்களாக அமைகின்றன. இவ்வாறு ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு தீர்வாக சோளம் இருக்கிறது. மேலும் இதனில் 100 கிராம் சோளத்தில் 365 எடையுள்ள கலோரி […]

You May Like