fbpx

மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்!… சாதாரண மதுபானங்களின் விலை உயருகிறது… எவ்வளவு தெரியுமா?

சாதாரண மது வகைகளின் விலையை பாட்டிலுக்கு, 2 ரூபாய் வரை உயர்த்துவது குறித்து, தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசின், ‘டாஸ்மாக்’ நிறுவனம் சில்லரை கடைகள் வாயிலாக, மதுபான வகைகளை விற்பனை செய்கிறது. இந்நிறுவனம், ஏழு நிறுவனங்களிடம் பீர்; 11 நிறுவனங்களிடம் இருந்து மது வகைகளை கொள்முதல் செய்கிறது. அதன்படி, சாதாரணம், நடுத்தரம், உயர்தரம் என, மூன்று வகைகளில் மது பாட்டில்கள் வாங்கப்படுகின்றன. மாதம் சராசரியாக, 50 லட்சம் பெட்டி மது வகைகள் விற்பனையாவதில், சாதாரண வகையின் பங்கு, 40 லட்சம் ஆகும்.

மது தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் விலையை லிட்டருக்கு, 3.47 ரூபாயாக, அரசு சமீபத்தில் உயர்த்தியது. இது, ‘சாதாரண மது வகை தயாரிப்பு செலவை அதிகரித்துள்ளது; அதற்கேற்ப மது பாட்டிலுக்கு கூடுதல் விலை வேண்டும்’ என, மது தயாரிப்பு ஆலைகள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. எனவே, சாதாரண மது வகைகளின் விலையை பாட்டிலுக்கு, 2 ரூபாய் வரை உயர்த்துவது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Kokila

Next Post

’இளைஞர்களே உங்களுக்கு வேலை இல்லையா’..? ரூ.11,000 ஊக்கத்தொகை வழங்கும் தமிழ்நாடு அரசு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Thu Sep 14 , 2023
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் மானியக் கோரிக்கையின் போது அறிவித்தபடி இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த ஆணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, இளைஞர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி அளித்து அவர்களை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து வேலைவாய்ப்பு வழங்கப்படும் அல்லது தொழில் முனைவோராக உருவாக்கப்படுவார்கள். கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் […]

You May Like