fbpx

ஷாக்!. மருந்து நிறுவனத்தில் நச்சு வாயு கசிவு!. ஒருவர் உயிரிழப்பு!. 9 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

Andhra: ஆந்திராவில் மருந்து நிறுவனத்தில் நச்சுவாயு கசிந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 9 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,

ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபல்லி மாவட்டம் பரவாடாவில் தாகூர் மருந்து ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், நேற்று மாலை ஆய்வகத்தில் திடீரென நச்சு வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. “எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல், தொழிலாளர்கள் உலையில் இருந்து வெளியேறும் புகையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது ஹைட்ரோகுளோரிக் அமிலம் (HCL) மற்றும் குளோரோஃபார்ம் ஆகியவற்றைக் கலக்கும்போது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை சுவாசித்த போது தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர். 6 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நச்சு வாயுவின் பக்க விளைவுகள் உடனடியாகக் காட்டப்படவில்லை. சில மணிநேரங்களுக்குப் பிறகு, நள்ளிரவில், தொழிலாளர்கள் இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினைகளை அனுபவிக்கத் தொடங்கினர். நச்சு வாயு புகையை சுவாசிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து நிறுவன நிர்வாகம் தொழிலாளர்களை எச்சரிக்கவில்லை என்றும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Readmore: உலக ‘கேடட்’ செஸ் சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு தங்கம்!. 6 வயது இந்திய வீரர் அபாரம்!

English Summary

One dead, nine others admitted to hospital in toxic gas leak at pharma company in Andhra Pradesh

Kokila

Next Post

ஒரு முறை முதலீடு செய்தால் நீங்கள் தான் பணக்காரர்..!! கடனே இல்லமால் வீடு, கார் வாங்கலாம்..!! எப்படி தெரியுமா..?

Thu Nov 28 , 2024
We give you a little advice on how to build a house without taking out a loan.

You May Like