நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து பாவேந்தன் விலகுவதாக அறிவித்துள்ளார். சீமான், இன்று ராணுப்பேட்டைக்கு செல்லவுள்ள நிலையில், பாவேந்தன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியை வீழ்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். பெரியாரையும், பிரபாகரனையும் எதிரெதிராக நிற்க வைப்பது பாஜக – சங் பரிவார்களுக்கு விருந்தாக அமையும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
நேற்றைய தினம் (பிப். 24) நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் விலகுவதாக அறிவித்திருந்தார். அதற்கு முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தமிழரசன் விலகினார். நாம் தமிழர் கட்சியில் இருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருவதால், சீமான் அதிர்ச்சி அடைந்துள்ளார்.