fbpx

அதிர்ச்சி..!! வைரம், தங்க நகைகள் கொள்ளை..!! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பெரும் பரபரப்பு..!!

நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் வைரம், தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை விவகாரத்து செய்வதாக அறிவித்த பின் சினிமா, பிட்னெஸ் என அவருக்கு பிடித்த விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அவர் ஒரு ஹிந்தி படத்தை தற்போது இயக்கி வரும் நிலையில், அதன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும், உடலை பிட் ஆக வைக்க அவர் அடிக்கடி சைக்கிள் ஓட்டவும் நேரம் செலவிடுகிறார். அதன் புகைப்படங்களையும் அவர் அடிக்கடி இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் வைரம், தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், வீட்டு பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Chella

Next Post

சொகுசு கார்களை திருடி கடத்தல் கும்பலிடம் 4 பேர் அதிரடி கைது….!

Mon Mar 20 , 2023
சொகுசு கார்களை திருடி விற்பனை செய்து வந்த கும்பலில் தொடர்புள்ள 4 பேரை டெல்லி காவல் படை கடந்த சனிக்கிழமை கைது செய்திருக்கிறது இந்த கும்பல் திருடப்பட்ட கார்களை ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருக்கின்ற வாடிக்கையாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி விஜய்நகரில் திருடப்பட்ட ஃபார்ச்சூனர் காரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய காவல்துறையினர் வாஹித், […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like