fbpx

அதிர்ச்சி..!! விஜய் டிவி பிரியங்காவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் நிகழ்ந்த விபத்து..!! நடந்தது என்ன..?

விஜய் டிவியில் தொகுப்பாளினி பிரியங்காவுக்கு சூட்டிங் ஸ்பாட்டில் விபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் அவருக்கு கை, கால் மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் தனக்கு உதவிய சிலர் பற்றி பிரியங்கா உருக்கமாக வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார்.

விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜே பிரியங்காவிற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். பிரியங்கா விஜய் டிவியில் மட்டுமின்றி, பல மேடை நிகழ்ச்சிகளிலும் திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோல சமூக வலைதளத்திலும் பிசியாக இருக்கிறார். தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் பல முக்கியமான நிகழ்வுகள் குறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் அடிக்கடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இப்போது பிரியங்கா தன்னுடைய யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோ தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கடந்த டிசம்பர் மாதம் இறுதி நாட்களில் இசையமைப்பாளர் மற்றும் பாடகரான தேவா விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும்போது அவர் முன்பு தான் தொகுத்து வழங்கி கொண்டிருந்த போது திடீரென்று அங்கு வழிக்கி விழுந்து விட்டதாகவும், அதில் தன்னுடைய கால் கை முகம் எல்லாம் அடிபட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், தேவா பாட்டு பாடிக் கொண்டிருக்கும் போது தான் பிரியங்கா டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டுள்ளது.

உடனடியாக பிரியங்காவை முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், தேவா பிரியங்கா வரும் வரைக்கும் பதட்டத்தோடு காத்துக் கொண்டிருந்தாராம். பிறகு பிரியங்காவுக்கு ஓரளவு ஓகே என்பது தெரிந்த பிறகு தான் நிகழ்ச்சியை முடித்து இருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து சில நாட்கள் வீட்டில் ஓய்வில் இருந்த பிரியங்காவை சில விஜய் டிவி பிரபலங்கள் பார்க்க வந்திருக்கின்றனர். அவர்களைப் பார்த்ததும் பிரியங்கா உருக்கமாக பேசியிருக்கிறார்.

அதில், எனக்கு அடிபட்டு இருக்கிறது என்பதை தெரிந்ததும் எத்தனையோ பேர் எனக்கு போன் போட்டு என்னுடைய உடல் நலத்தை பற்றி விசாரிச்சுட்டே இருக்காங்க. இதை நினைக்கும் போது எனக்கு சந்தோசமா இருக்கு. நமக்குன்னு நாலு பேரு இருக்காங்க என்று எனக்கு கூடுதல் பலமாக இருக்கிறது. இன்னும் 50 வருடத்திற்கு நான் இதுபோல தொகுப்பாளராக உங்களையெல்லாம் மகிழ்விப்பேன் என்று பேசியுள்ளார்.

Chella

Next Post

செய்தியாளருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி..!! காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்..!!

Thu Jan 25 , 2024
திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த செய்தியாளர் நேசபிரபுவை நேற்று சிலர் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த பிரபு, அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் தஞ்சமடைந்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலாளர் அறையில் இருந்த அவரை சுற்றி வளைத்த மர்ம கும்பல், கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த பிரபு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களாகவே தன்னை […]

You May Like