ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை போலவே தோற்றமளிக்கும் மூன்று பேர் இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் விரைவில் கொல்லப்படலாம் என்றும் உக்ரைன் உளவுத்துறை செய்தித்தொடர்பாளர் பேசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2024ம் ஆண்டு பிறந்தது முதலே ஆங்காங்கே சோக சம்பவங்கள் நடந்துவருகிறது. அதாவது, தத்துவ ஞானிகளின் கணிப்புகள் பலித்துவருவதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். அந்தவகையில், கணிப்புகளில் ஒன்றாக கருதப்படும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கொல்லப்படுவார் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதுதொடர்பான கருத்துகள் தற்போதிலிருந்தே பேச ஆரம்பித்துள்ளது. அந்தவகையில், ஏற்கனவே புடின் இறந்துவிட்டதாகவும், புடினுக்கு பதிலாக, அவரைப்போல் தோற்றமளிக்கும் ஒருவர்தான் பொது நிகழ்ச்சிகளில் தோன்றுவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகிவருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் உளவுத்துறை செய்தித்தொடர்பாளரான Andriy Yusovம், புடினுக்கு டூப்பாக செயல்படும் மூன்று பேர் இருப்பதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, புத்தாண்டையொட்டி தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய புடின் உண்மையில் புடின் இல்லை என்றும், அது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட தோற்றம் என்றும் பலர் கூறியுள்ளனர். புடினுடைய கழுத்து அவருடைய உடலுடன் பொருந்தாதது போல் காட்சியளித்ததாக அந்த உரையைக் கேட்டவர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.