fbpx

ஷாக்கிங் நியூஸ்..!! 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு..!! நோயாளிகள் பாதிக்கும் அபாயம்..!!

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், மருத்துவமனை மற்றும் நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

நிதி நெருக்கடியை காரணம் காட்டி ஆம்புலன்ஸ் சேவையை அரசு குறைக்க முயல்வதாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதனை கண்டித்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் ஜனவரி 8ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் டிரைவர்கள் உதவியாளர்கள் என சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் நிலையில், அவர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. ஏற்கனவே கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், நிதி நெருக்கடியை காரணம் காட்டி ஆம்புலன்ஸ் சேவையை குறைக்க அரசு முயல்வதாக குற்றஞ்சாட்டியுள்ள ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம், ஜனவரி 8 முதல் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

Chella

Next Post

நாளை முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை..!! உற்சாகத்துடன் சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்..!!

Fri Nov 10 , 2023
நாடு முழுவதும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை முதல் தீபாவளி விடுமுறை தொடங்குகிறது. நாளை இரண்டாவது சனிக்கிழமை என்பதால் ஏற்கனவே வங்கிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்கள் […]

You May Like