ஜி-20 உச்சி மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பல்வேறு நாட்டின் அதிபர்கள் வருகை தர உள்ளனர். டெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடப்பதையொட்டி செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக வான்பரப்பில் டிரோன்கள், டிரோன் கேமிராக்கள், ரிமோட் ஏர் கிராப்ட், சிறிய வகை விமானங்கள், ராட்சத பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ரெயில் மற்றும் பேருந்து போக்குவரத்திலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளதால் செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை, ஆகிய 5 நாட்களுக்கு டெல்லியில் உள்ள மதுக்கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது.