மத்திய அரசு ஊழியர்கள் தங்களுக்கு உரிய அகலவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். லட்சக்கணக்கான ஊழியர்களின் கணக்கில் நிலுவையில் இருக்கும் தொகையை ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு வழங்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020இல் ஜனவரி மாதம் முதல் 2021 ஜூன் மாதம் வரை பிடித்தம் செய்யப்பட்ட அகவிலைப்படியை மீண்டும் வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத DA அரியர் தொகை எப்போதுமே வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது 18 மாதங்களாக சம்பள உயர்வு போடப்படவில்லை. அதனை அரியர் தொகையாக திருப்பித் தருவார்கள் என்று அரசு ஊழியர்கள் நம்பி வந்தனர். அந்த பணத்தை எதிர்பார்க்க வேண்டாம் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.