fbpx

களவாணி படத்தை மிஞ்சிய சம்பவம்.. காரில் பெண்ணை கடத்திய அதிர்ச்சி.!

திருவள்ளூர் மாவட்ட பகுதியில் கொடிவலசா கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் என்பவர். இவருக்கு மனைவி மஞ்சுளா மற்றும் மகள் ஷியாமளா. இவர்கள் இருவரும் பள்ளிப்பட்டில் உள்ள நகைக்கடைக்கு சென்றுவீட்டு ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தார்கள்.

அப்போது, அவர்களை வழிமறித்து 2 பேர் ஆட்டோவில் இருந்த ஷியாமளாவை அம்பாசிடர் காரில் கடத்தி கொண்டு வேகமாக மறைந்துள்ளனர். இதை தொடர்ந்து, தாய் காவல்துறைக்கு தகவல் அளித்ததால், போலிசார் கடத்தல்காரர்களின் காரை விரட்டிச்சென்றனர்.

8 கிலோ மீட்டர் தூரம் சென்ற நிலையில் தமிழக – ஆந்திர மாநில எல்லையோரப் பகுதியில் காரை மடக்கி அவர்களை பிடித்தனர். இதனை தொடர்ந்து அந்த இரு நபரையும் கைது செய்து போலீசார் மேற்க்கொண்ட விசாரணையில், பல விஷயங்கள் தெரியவந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு ஜெயக்குமார் என்பவர் ஷியாமளாவை பெண் கேட்டுச் சென்றுள்ளார். ஆனால், அந்த பெற்றோர் பெண் தர மறுத்ததால் தனது நண்பர் விஜய்யுடன் சேர்ந்து அந்த பெண்ணை கடத்தியுள்ளார் என தெரியவந்துள்ளது.

Baskar

Next Post

டாஸ் வென்று இந்தியா முதலில் பேட்டிங்…

Sun Nov 6 , 2022
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. இது 8வது போட்டியாகும். இதில் சூப்பர் 12 சுற்றில் 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றது. குரூப் ஒன்றில் நியூசிலாந்து மற்றும்இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 2ல் பாகிஸ்தான் –இந்தியா  அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. லீக் சுற்றின் […]

You May Like