பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. வருடம் ஒன்றுக்கு அவர்களுக்கு 11 மாத ஊதியம் மட்டுமே வழங்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.
மே மாதத்தில் பள்ளிகள் செயல்படாததால் ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்று அறிவித்திருக்கிறது. இந்த நிபந்தனையுடன் தான் அவர்கள் பணியமர்த்தப்பட்டதாக விளக்கமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பகுதி நேர ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.