சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரித்து இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவது உண்டு. அந்த வகையில், இன்று ஆயுதபூஜை தினத்தன்று தங்கம் விலை மேலும் அதிகரித்து இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.38,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை, ரூ.4.20 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.70-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.66,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.