fbpx

ஷாக்கிங்..!! கிரிக்கெட் மைதானத்தில் திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்த வீரர்..!! தொடரும் மாரடைப்பு..!!

கிரிக்கெட் போட்டியின் போது வீரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவரின் பெயர் விகாஸ் நேகி. 34 வயதான இவர், டெல்லியில் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். நொய்டாவின் செக்டார் 135ல் கட்டப்பட்ட புதிய மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தப் போட்டி மேவரிக்-11 மற்றும் பிளேசிங் புல்ஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

மேவரிக்-11 இன் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அந்த அணியின் பேட்ஸ்மேன்களான உமேஷ் குமாரும் விகாஸ் நேகியும் களத்தில் இருந்தனர். 14-வது ஓவரின் 5-வது பந்தில் உமேஷ் ஷாட் அடிக்க மறுமுனையில் நின்ற விகாஸ் ரன் எடுக்க ஓடினார். பந்து எல்லையை தொட்டு பவுண்டரியாக மாற, உமேஷுடன் கைகுலுக்கி விட்டு விகாஸ் மறுமுனையில் உள்ள ஸ்ட்ரைக்கு திரும்பத் தொடங்கினார். அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரத்திலேயே ஆடுகளத்தில் மயங்கி விழுந்தார்.

சில நிமிடங்களில் அனைத்து வீரர்களும் விகாஸைச் சுற்றி திரண்டு முதலுதவி செய்ய தொடங்கினர். விகாஸ் மைதானத்தின் நடுவே விழுந்ததை தொடர்ந்து, அவருக்கு உடனடியாக CPR கொடுக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த முழு சம்பவத்தின் வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

அயோத்தி: ராமர் கோவில் திறப்பு விழாவால் ஷேர் மார்க்கெட்டில் உயரும் பங்குகள்.! முழு விவரம்.!

Wed Jan 10 , 2024
மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் நடைபெற இருக்கிறது. உலகெங்கிலும் இருந்து 7000 சிறப்பு அழைப்பாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கின்றனர் அயோத்தி நகரில் பல முதலீடுகளை செய்து அந்த நகரை ஒரு ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதன் விளைவாக அயோத்தி நகரில் பல சந்தைகள் […]

You May Like