fbpx

பதைபதைக்கும் வீடியோ: திருமண விழாவில் நடனமாடும்போது மயங்கி விழுந்து பெண் மரணம்!!!

தற்போதைய காலகட்டத்தில் மாரடைப்பு காரணமாக நொடியில் நிகழும் மரணம் தொடர்பான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதிலும், விழாக்களில் நடனமாடிக்கொண்டிருக்கும் போது, மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது என பொது நிகழ்ச்சிலேயே இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் டிசம்பர் 14 இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றில் 4,5 பெண்கள் மேடையில் நடனமாடுகின்றனர். அப்போது நடனமாடும் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடனமாடிக்கொண்டிருந்த போது, மயங்கி விழுந்தார்.

மேடையில் மயங்கி விழுந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னர், அவரை பரிசோத்தித்த மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கின்றனர். நடனமாடிக்கொண்டிருந்த போது மயங்கி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் நடனமாடும் மேடையில், அந்த பெண் விழுந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

Kathir

Next Post

#ஈரோடு: வெளியே சென்று வந்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.. மகள் தூக்கில் சடலமாக கிடந்த பரிதாபம்..!

Sat Dec 17 , 2022
ஈரோடு மாவட்ட பகுதியில் உள்ள கதிரம்பட்டியில் நெசவாளரான முருகேசன் என்பவர் தனது மகள் ஸ்ரீநிதியுடன் வசித்து வருகிறார். மகள் தனியார் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வருகிறார்.  நேற்றைய தினத்தில் உடல் நல குறைவின் காரணமாக ஸ்ரீநிதி பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரீநிதியின் தாயானவர் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.  வீட்டில் நுழைந்த போது தனது மகள் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளதை பார்த்து ஸ்ரீநிதியின் […]

You May Like